மொக்கை Hits:
2008ல் வந்த பாடல்களில் சில நினைக்க முடியாத அளவிற்கு HIT. அதில் நான் கொஞ்சம் too muchனு நினைக்கிற பாடல்களின் list இங்கே.
Where is the party:
என்ன இருக்கு இந்த பாட்டுல? படு கேவலமான ஆட்டம். தற்கொலை பண்ணிக்கத் தூண்டற lyrics. அபஸ்வர குரல். ஏதோ இசை கொஞ்சம் பரவாயில்லை ஒரு mass பாடலுக்கு. அதுலயும் இந்த சிம்புவின் பேட்டிகளை கேட்டதுக்கு அப்புறம் ஏதோ கொஞ்ச நஞ்சம் போனாப் போகுதுன்னு பொறுத்ததும் wasteங்கற முடிவுக்கு வந்தாச்சு.
கனவிலே கனவிலே:(நேபாளி)
எங்கேயோ கேட்ட பாடல். அது இந்த பாடலுக்குத் தகுந்த வரி தான். கேட்டதாகவே இருந்தாலும் கொஞ்சமாவது justification கொடுத்து இருக்கலாம். ஒரு பக்கம் குரல் ஒலிக்கும் ஒரு பக்கம் சம்பந்தமே இல்லாமல் "சக் சக்" என்று செருப்பு தேய்க்கும் சத்தம்.அது தான் rhythmமாம்.என்னவோ போங்கப்பா.
கத்தாழக் கண்ணாலே:(அஞ்சாதே)
வால மீனுக்கும் வரிசையில் வந்த அடுத்த கொடுமை. அதே வரிசயில் இந்த பாடல் hit வேற. என்ன தான் இருந்தாலும் மாளவிகா இல்லாதது ஒரு குறை தான். இருந்திருந்தால் அந்தக் கொடுமையையும் சகிக்க வேண்டி இருந்திருக்கும். ஒண்ணும் சொல்வதற்கு இல்லை இந்தப் பாடலைப் பற்றி.
பாட்டு உன் கண்களில்:(தசாவதாரம்)
கமல் தான் ஹீரோ சரி, கமல் தான் பாடினார் சரி, உணர்ச்சி பொங்கும் வரிகள் சரி. பயங்கர எதிர்பார்ப்பு வெற்றி கொடுத்த படம் சரி, ஆனால் இதற்காகவெல்லாம் இந்த மாதிரி பாடல்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தப் பாடல் ஏதோ அதி அருமையான பாடல் என்று இதற்கு remix என்ற பெயரில் மறுபடியும் கொலை வேறு.
எப்படி இருந்த என் மனசு:(சந்தோஷ் சுப்ரமணியம்)
தெலுங்கு படத்த தமிழ்ல எடுதாங்க ரெண்டுத்தையும் பார்த்தோம், அதே பாடல்கள் சிலதை இதிலும் போட்டார்கள் அதையும் பார்த்தோம். ஆனால் ஒரே மாதிரி பாடலை முழுவதுமாக இரண்டு முறை ஒரே படத்தில் போட்டுப் பார்க்க வைத்தது அவர்கள் தப்பு என்றால் அந்த இரண்டையுமே Hit ஆக்கிய நம்மை என்ன சொல்வது?
நிலா நிலா ஓடி வா:(நாயகன்)
கமல்-மணிரத்னம் படத்தோட பெயரை வைத்துக் கொண்டு இந்தப் படத்தில் செய்த அழிச்சாட்டியம் போதாதென்று இந்த பாட்டு வேறு. ஏம்பா எங்க பொறுமையை சோதிக்கறீங்க? இந்தப் படம் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பொங்கல் அன்று கலைஞர் டிவியில் வேறு ஒளிபரப்பினார்கள். அந்தப் பாடலை முதல் முறையாக முழுதும் பார்க்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததில் இருந்து நான் கிட்டத் தட்ட ஞானியாகி விட்டேன்.
டண்டணக்கா:(காளை)
தாங்க முடியாத அளவிற்குக் கொடுமை தந்த பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்.ஆனால் Hit. யாரைக் குறை சொல்வதென்றே தெரியவில்லை.
யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை:(பழனி)
பரத் இந்தப் பாடலுக்கு எப்படியாவது ஆட முயற்சி செய்தார். ஆனால் அது தோல்வி தான். இசை என்று ஒன்று இருந்தால் தானே அதன் தாளத்திற்கேற்பக் கால்கள் ஆட முடியும். இதை இசையின் வரிசையில் கூட சேர்க்க முடியாது.
இங்கு குறிப்பிட்டுள்ள பாடல்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த வரை சென்ற ஆண்டின் மொக்கை hits. இந்தப் பாடல்களை ஹிட் செய்தது மக்களா இல்லை அதை மறுபடி மறுபடி ஒளிபரப்பி மறக்க நினைத்தால் கூட விடாமல் கொடுமைப் படுத்திய தனியார் தொலைகாட்சிகளா தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல்களைக் கேட்டால் "நெஞ்சுப் பொறுக்குதில்லையே!!!"