Monday, December 29, 2008

சூ சூ மாரி!!!

கொஞ்ச நாளுக்கு முன்னாடி கலைஞர் டி.வில ஓரு பாட்டைக் கேட்டேன். சின்னப் பசங்க எல்லாம் சேர்ந்து கூத்து அடிக்கற பாட்டு தான். வெயில் படத்தோட வெயிலோடு விளையாடி, அழகி படத்துல வரும் டமக்கு டமக்கு டம் பாட்டு மாதிரியே இதுலயும் சின்ன பசங்க எல்லாம் சேர்ந்து செய்யும் அட்டகாசம் தான் highlight. எனக்கு வெயிலோடு விளையாடி பாட்டு ரொம்ப பிடிக்கும். அதுல இழையோடற ஒரு நூலிழை சோகம் தான் அந்த பாட்டை ரசிக்க வெச்சது. 
        ஆனா இந்த "சூ சூ மாரி" பாட்டுல இருக்கற அழகு அந்த குரல். எதுவுமே முக்கியம் இல்லைன்னு விட்டேத்தியான ஒரு குரல். ஆனா பாடற பாட்டோட சுவை குறையாம இருக்கறதுக்கு உதவினதே அந்த விட்டேத்தியான குரல் தான். என்ன ஆழம்!! "சூ சூ மாரி" அப்படின்னு இழுத்து பாடும்போது அப்படியே அந்த குரல் நம்மள அந்த பாட்டுக்குள்ள இழுத்துட்டுப் போவது தான் உண்மை...அந்த குட்டிய வேற ஒரு நிகழ்ச்சில பார்க்க முடிஞ்சது.அதுல கிறித்துமஸ் தாத்தா ஒரு tongue twisterஅ சொல்ல எல்லா சின்ன பசங்களும் அப்படியே நா பிறழாம சொல்லணும். இந்த பொண்ணுக்கு முறை வந்ததும் சர்வ சாதாரணமா சொல்லிட்டு ஒரு சின்ன smile வேற செஞ்சிது. அப்பறம் ஒரு பாட்டு பாட சொன்னதும் இந்த பாட்டைத் தான் பாடி காமிச்சது அந்த பொண்ணு.அப்போ தான் தெரிஞ்சது அந்தப் பாடலோட குரலுக்கு சொந்தக்காரி யாருன்னு. நா பிறழாம குரல் பிசுறாம அந்த சின்ன பொண்ணு பாடி இருக்கற அழகே தனி. பெருசா ஒண்ணும் கலக்கற music எல்லாம் கிடையாது. பெரிய காட்சி அமைப்பு எல்லாம் கிடையாது. இருந்தாலும் சின்ன சின்ன ரசிக்கக்கூடிய விஷயங்கள் அந்தப் பாட்டுல நிச்சயமா இருக்கு. அதுல ஒரு சின்னப் பையன் காமெராவப் பார்த்து பார்த்து பேசற விதம் soopero sooper. நல்ல சேட்டை. குச்சி iceஅ சாப்பிட்டுட்டே அந்த பையன் காமெராவப் பார்த்து உனக்கு வேணுமா?வேணாம்னாப் போ..! அப்படின்னு சொல்லிட்டு போறது செம டமாசு...இந்தப் பாட்டு அந்த படத்தோட அருமையான பாடலும் இல்லை. "ஆவாரம் பூ" பாட்டுக்கு தான் என்னோட ஓட்டு...இருந்தாலும் இந்த பாட்டைப் பத்தி எழுதணும்னு ஏதோ ஒரு எண்ணம்...அதான்..

ஓகே..வர்ட்டா!!!

Friday, December 19, 2008

அவனா நீ?

                                           
இது ஒரு விபத்து, விபரீதம் எப்படிச் சொல்வது? நாளை முதல் நான் எப்படி மத்தவங்களைப் பார்ப்பேன்?

என்ன வேலை செஞ்சிட்ட டா? என்று என் நண்பன் என்னை உலுக்கிய போது தான் நான் செய்த காரியத்தின் தீவிரம் கொஞ்சம் உரைத்தது எனக்கு.
ஒரு நாளுக்கு முன்னாடி நான் இதோ என் முன்னால இருக்கும் பல பேர்ல ஒருத்தனா ஒரு சாதரண மனுஷனாத்தான் இருந்தேன்?
ஏன் எனக்கு இந்த ஒரு நிலைமை? எல்லாத்துக்கும் காரணம் என்னோட அவசர புத்திதான்... இனி என்னோட வாழ்க்கை? ஹய்யோ அவசரத்துல இப்படி ஒரு வேலை செய்ய எப்படி முடிஞ்சது என்னால? 

நான் 26 வயதான middle class குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சராசரி ஆண்.ஒரு சராசரி ஆள்.என் வயதுள்ள பல பேரைப் போல் எனக்கும் நல்ல படிப்பு,நல்ல வேலை,அப்பா அம்மா சொல்லும் பெண்ணைத் திருமணம்,நல்ல வாழ்க்கை என்று சின்ன சின்ன ஆசைகள்(?!!!) தான் இருந்தது. அதில் பாதி கிணற்றைத் தாண்டினேன். மற்றவை என் வாழ்வில் நடப்பதற்குள் இதோ இது நடந்து விட்டது...
 
இன்று காலை எப்பவும் போல் நான் officeக்குக் கிளம்பினேன். கிட்டத் தட்ட 5000 பேர் பணிபுரியும் இடம் அது. ஆனால் அதில் எனக்கு ஸ்ரீராம் மட்டும் தான் ஒரே நண்பன். எனக்கு நடந்த இந்த விபரீதம் இன்று இதில் வேறு யாருக்காவது நடந்திருந்தால்? நினைக்கவே முடியலை...இந்த வேலைக்கு நான் தான் கிடைச்சேனா அந்த கடவுளுக்கு?

என்னுடன் வேலை செய்பவள் ஹேமா. அவளைப் பார்த்து goodmorning சொல்லி விட்டு நான் என்னுடைய cabinக்கு செல்ல முற்பட்டேன். அவள் என்னை இடை மறித்து "எனக்கு ஒரு சின்ன problem, lunch timeல கொஞ்சம் உன் கூட தனியா பேசணும்"என்றாள். நானும் சரி என்றேன். அதற்குப் பிறகு நான் அதைப் பத்தி மறந்தே போய்விட்டேன். ஒரு 2 மணி இருக்கும். coffee குடிக்கும்போது அவளைப் பார்த்தேன்.அப்போது தான் அவள் ஏதோ ப்ரச்சனை என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவள் கோபமாக இருந்தாள். நான் அவளிடம் போய்," Iam very sorry hema.ஏதோ வேலைல மறந்துட்டேன்" என்றேன் குற்ற உணர்வு மேலிட. அவள் இப்பவாவது பேசலாமா சார்?"என்றாள். நானும் "கண்டிப்பா" என்றேன்.

நாங்கள் ஒரு மூலையைத் தேர்ந்து எடுத்து அமர்ந்தோம். அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது.அந்த ஒரு கணம் இனி என்னோட வாழ்க்கையின் மொத்தத்தையும் மாற்றி அமைக்கப் போகிறது என்று எனக்கு அப்போ ஒரு சின்ன clue கூட இல்லை.

ஸ்ரீராம் என்னை மறுபடியும் நம்ப முடியாமல் பார்த்தான். "நீயா டா இப்படி? நீ ரொம்ப பயந்தவன் அப்படின்னு தான டா நான் நினைச்சேன்?எப்படி டா?இனிமேல அவ்வளவு தான்..உன்னோட வாழ்க்கையைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியாடா?என்றான்.
"என்ன என்னடா பண்ண சொல்ற?"என்று கத்தினேன். என்ன என்னடா பண்ண சொல்ற? நான் என்ன கொலையா பண்ணிட்டேன்?அவ என்னப் பார்த்து, என் கையைப் பிடிச்சிட்டு I LOVE YOU சொல்லுவான்னு எனக்கே தெரியாது டா. நானும் ஒரு சாதாரண மனுஷன் தானடா? அவள மாதிரி ஒரு பொண்ணு வந்து இப்படி சொல்லும்போது நான் எப்படி டா மறுக்க முடியும்?அதான் உடனே சரின்னு சொல்லிட்டேன்.அதுக்கு போய் ஏன்டா என்னை இப்படி கலாய்க்கற? எனக்கு என்றும் இல்லாத வெட்கம்.

இனிமேல என் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகுதோ?! ஆம்.இது ஒரு விபத்து தான் ஆனால் இனிய விபத்து.இனிமையான விபரீதம்.நாளை முதல் நான் எப்படி மத்தவங்களைப் பார்ப்பேன்?எல்லோரும் இவனப் போலவே கிண்டல் பண்ணித் தீர்த்துடுவாங்களே!!! ஆனா நல்ல வேளை இது என்னோட ஆபீஸ்ல வேற யாருக்கும் நடக்கல என்று மகிழ்ந்தேன்.என்னைத் தேர்ந்து எடுத்த கடவுளுக்கு கோடி நன்றி...
இதோ என்னுடைய cell phone சிணுங்குது. ஹேமாவாகத்தான் இருக்கும்.
நான் வர்ட்டா!!!

Wednesday, December 3, 2008

கண்ணைப் பற்றி அண்ணன்

இன்னிக்கு ஒரு சில கவிதைகள்.என்னோடது இல்ல. நான் கவிதை எழுதணும்னா யோசிக்கணும் எனக்கு. ஆனா இந்த ஜீவனுக்கு அந்த rules எல்லாம் கிடையாது.அவன் தான் என் அண்ணா.

என்னோட அண்ணா புதுக்கவிதை மரபுக்கவிதைன்னு எல்லாம் பாகுபடுத்தாம அருமையா கவிதை எழுதுவான்.
என்ன தோணுதோ அதை பிசரு இல்லாம எழுதறதுல அவன் கில்லாடி. ஒரு சின்ன sample.

நம் சமுதாயத்திற்கு புதுக்கவிதை புனையும் இளைஞர்கள் வேண்டாம்
நம் சமுதாயம் புதுக்க விதை போடும் இளைஞர்களே வேண்டும்

இது ஒரு 2 நிமிஷத்துல சொன்னது.

எனக்கு என் அண்ணா எழுதினதுல ரொம்ப favourite கிட்டத்தட்ட 10 இல்ல 12 வருஷத்துக்கு முன்னால அவன் எழுதின கண்ணைப் பத்தின கவிதைதான்.


கலர் கலராய்க் கோடி வண்ணங்கள் காட்டும் கண்ணின் நிறம்
கறுப்பு வெள்ளை

இன்னும் எனக்கு அது மறக்கவே இல்லை.

இந்த துளிகளைப் பல நேரங்களில் நான் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்திருக்கிறேன். அவன் எழுத்துக்களுக்கு முதல் விசிறி நான்.




அடுத்த பதிவு ஒரு சின்ன கதை..

இப்ப நான் எஸ்!!!
வர்ட்டா!!!