Wednesday, December 3, 2008

கண்ணைப் பற்றி அண்ணன்

இன்னிக்கு ஒரு சில கவிதைகள்.என்னோடது இல்ல. நான் கவிதை எழுதணும்னா யோசிக்கணும் எனக்கு. ஆனா இந்த ஜீவனுக்கு அந்த rules எல்லாம் கிடையாது.அவன் தான் என் அண்ணா.

என்னோட அண்ணா புதுக்கவிதை மரபுக்கவிதைன்னு எல்லாம் பாகுபடுத்தாம அருமையா கவிதை எழுதுவான்.
என்ன தோணுதோ அதை பிசரு இல்லாம எழுதறதுல அவன் கில்லாடி. ஒரு சின்ன sample.

நம் சமுதாயத்திற்கு புதுக்கவிதை புனையும் இளைஞர்கள் வேண்டாம்
நம் சமுதாயம் புதுக்க விதை போடும் இளைஞர்களே வேண்டும்

இது ஒரு 2 நிமிஷத்துல சொன்னது.

எனக்கு என் அண்ணா எழுதினதுல ரொம்ப favourite கிட்டத்தட்ட 10 இல்ல 12 வருஷத்துக்கு முன்னால அவன் எழுதின கண்ணைப் பத்தின கவிதைதான்.


கலர் கலராய்க் கோடி வண்ணங்கள் காட்டும் கண்ணின் நிறம்
கறுப்பு வெள்ளை

இன்னும் எனக்கு அது மறக்கவே இல்லை.

இந்த துளிகளைப் பல நேரங்களில் நான் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்திருக்கிறேன். அவன் எழுத்துக்களுக்கு முதல் விசிறி நான்.




அடுத்த பதிவு ஒரு சின்ன கதை..

இப்ப நான் எஸ்!!!
வர்ட்டா!!!

No comments: