Tuesday, November 4, 2008

இதுவும் இராமாயணம் தான்!!!

ஒரு சின்ன matter. யாரப் பத்தின்னு அப்பறம் பார்க்கலாம். நாங்க friends எல்லோரும் ஒரு sunday meet பண்ணோம். அப்போ ஒரு சின்ன skit பண்ணாலாம்னு முடிவு பண்ணிணாங்க. அங்க இருந்து தான் நம்ம கதை ஆரம்பிக்குது.

திரைக்குப் பின்னால்

எல்லோரும் ட்ரெஸ் செஞ்சி அழகா இருந்தாங்க. அரங்கேற்றத்துக்கு முன்னால் ஒரு foto session. அவங்க அவங்க சொந்தக்காரங்க மும்முரமா foto எடுத்துட்டு இருந்தாங்க. வசனம் மறந்தா சொல்லிக் கொடுக்க ஒரு prompter வேற இருந்தார். என்ன skitனு சொல்லவே இல்லையே!!! இராமாயணம் தான்.
முதல்ல ஒரு சின்ன intro ராமர் பிறப்பு,வனவாசம் பத்தி எல்லாம் சொல்ல அவர் இருந்தார். அப்பறம் நம்ம பிறவி நடிகர்களின் நடிப்பு ஆரம்பம். சீதாவுக்கு ராமர் உணவு தேடப் போவதுலர்ந்து சீதாவை அனுமார் உதவியோட மீட்பது வரை இந்தக் கதை இருக்கும்னு சொன்னாங்க. ஆமாம் பெரிய்ய்ய்ய்ய பகுதி தான் அப்படின்னு நாங்களும் நினைச்சோம். ஆனா ஒரு 5 நிமிஷத்துல எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடுவாங்கன்னு சொன்னாங்க.


திரையில்

Prompter கதையோட முன்னோட்டத்த ஒரு intro கொடுத்தார். அதுக்கு அப்பறம் ராமர்.சீதா,லக்ஷ்மணன் இவங்க மூணு பேரோட entryதான் முதல் காட்சி. ராமர் ஏதாவது உணவு கொண்டு வர்றேன்னு சொல்லி காட்டுக்குள்ள போறார்.
கொஞ்ச நேரம் காத்திருந்த சீதா லக்ஷ்மணனைப் பார்த்து ராமரைத் தேடிட்டு வரச் சொல்றாங்க. லக்ஷ்மணனும் முதல்ல போகாம இருந்துட்டு சீதா சத்தம் போட்டதும்,ஒரு கோடு கிழித்து விட்டு அதை சீதா தாண்டாமல் இருக்கணும்னு சொல்லிட்டு ராமரைத் தேடிப் போறார். அந்த நேரத்துல நம்ம villain ராவணனோட entry.
சீதாவ ராவணன் தூக்கிட்டுப் போவது,அனுமார் உதவி செய்வது, சீதா ராமருடன் சேர்வது,என்று படு வேகமாக முடிஞ்சது அந்த கதை. இதுல highlight என்னன்னா, ராவணன் சீதாவ தூக்கிட்டு போகும்போது ஏதோ காரணத்துனால அப்படியே freeze ஆகிட்டார். prompter பின்னால இருந்து "சீதாவக் கூட்டிட்டு போ" அப்படின்னு சொல்லிட்டே இருக்கார். ராவணன் நகரவே இல்லை. அந்த நேரத்துல சீதா கதை நகரணுமேன்னு ராவணன தர தரன்னு இழுத்துட்டுப் போனது சீதாவுக்கு சமயோசிதமா தோணிருக்கலாம். ஆனா கதையையே மாத்தறாங்கன்னு அவங்களுக்குப் புரியலை.
பார்த்த எங்களுக்கு பயங்கர சிரிப்பு. படிதாண்டாப் பத்தினி சீதா இப்படி ராவணன இழுத்துட்டு போறாளேன்னு ஒரே comments. அதப் பத்தி எல்லாம் கவலையே படலை அவங்க. கடைசி sceneல எல்லோரும் சேர்ந்து நிக்கும்போது சீதா ராமரை ஒரு பக்கமும் லக்ஷ்மணன ஒரு பக்கமும் பிடிச்சிட்டு நின்னாங்க. இதப் பார்த்து கூட நாங்க ரசிச்சிட்டு தான் இருந்தோம். இந்த காலத்து சீதான்னு தான் எல்லோரும் பேசிக்கிட்டோம்.
என்ன ஆச்சு சீதாக்கு அப்படின்னு நாங்க கேட்டப்போதான் தெரிஞ்சது சீதாவுக்கு ராமரா நடிச்சவர விட ரவணனா நடிச்சவரையும், லக்ஷ்மணனா நடிச்சவரையும் ரொம்பப் பிடிக்குமாம். இது இன்னும் soooperஆ இருந்தது.

ஆக மொத்தத்தில எங்களுக்கு அன்னிக்கு நல்ல சிரிப்பு மருந்து கிடச்சுது. BTW, இந்தக் கதை நாயக நாயகிகள் இயக்குனர் இவங்க எல்லாம் யாருன்னு சொல்லவே இல்லையே!!!


மூலக் கதை:
வால்மீகி,கம்பர்

திரைக்கதை
வசனம்
இயக்கம்
பெற்றோர்கள்


மொழி:
ஆங்கிலம்


நடிப்பு:
3ல் இருந்து 6 வயது பொடிப் பசங்க
(இப்ப புரியுதா நம்ம சீதா ஏன் அப்படி எல்லாம் நடந்துக்கிட்டாங்கன்னு?)

இதப் பத்தி விமர்சிக்கலாம்னு தான் இருந்தேன் வேற யாராவது நடிச்சிருந்தா..
ஆனா
குழந்தைகளை விமர்சிப்பது அழகில்லை
தெய்வத்தை விமர்சிப்பது முறையில்லை
குழந்தைகளே தெய்வமா வந்ததால விமர்சிக்க மனசில்லை...

இதோட கதை முடியலை. நான் சொல்ல வந்த,ஆச்சர்யப்பட்ட விஷயமே வேற. கிட்டத் தட்ட 7 குழந்தைங்கள வெச்சி(இதுல 5 குழந்தைங்களுக்கு 5 வயசுக்கும் குறைவு.2 பேருக்கு 6 இல்ல 7 வயசு) சும்மா உட்கார வெக்கறதே கஷ்டம். இவங்களுக்கு வசனம் எல்லாம் சொல்லித் தந்து அங்க கிட்டத் தட்ட 30 பேர் முன்னடி நடிக்க வெக்க நினைக்கிறாங்களேன்னு மனசுல சிரிச்சிட்டு காத்திருந்தேன். இப்போ எதுவும் முடிவு செய்ய வேண்டாம். performance எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு காத்துட்டு இருந்தேன்.

குழந்தைங்களப் பார்த்துட்டு இருக்கறதே ஒரு visual treat. இதுல அவங்க வேஷம் எல்லாம் போட்டுட்டு திரைக்கு முன்னால நின்னா!!! எல்லோரும் கலக்கிட்டாங்க. அருமையான நடிப்பு. எங்களைப் பத்தி எல்லாம் கவலைப் படவே இல்ல அவங்க யாரும்.

அத விட ஆச்சர்யம் என்னன்னா எவ்வளவு பெரிய கதைய, சர்வ சாதாரணமா எவ்வளவு சின்னதா பசங்களுக்கும் ஆர்வம் குறையாத மாதிரியும் பார்கறவங்களுக்கும் அலுப்பு இல்லாத மாதிரியும் எல்லத்துக்கும் மேல எந்த ஒரு விஷயத்தையும் விடாம(ராமர் உணவு தேடிப் போறதிலேர்ந்து,லக்ஷ்மணன் சீதாவுக்குக் கோடு கிழிப்பது, ராவணன் உணவு கேட்டு வருவது,சீதாவைக் கவர்ந்து போவது,அனுமார் உதவியோடு சீதாவை மீட்பது அப்படின்னு கதைக்கு வேண்டிய ஒவ்வொரு முக்கியமான விஷயத்தையும்)சொல்லி இருந்தாங்க.என்ன திரைக் கதை?!!! எல்லா இயக்குனர்களும் line கட்டி நிக்கணும் இவங்க கிட்ட.!!! soooooper appu!!!


சும்மாவா சொன்னாரு திருவள்ளுவர் :
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைசொல் கேளா தவர் " அப்படின்னு .....

கண்ண மூடிட்டு யோசிச்சா இனிக்குது அந்த galatta.


சரி இப்போ நான்
அபீட்
வர்ட்டா!!!

1 comment:

mee-and-mine said...

cute Ramayanam. :)

and

"Dheivangalai vimaripadhu...
kulandhaigalai vimarsipadhu...
Dheivangale kulandhaigalaanal..."

thats a good one...